திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து தமது கட்சி நிர்வாகிகளிடம் காங்கிரஸ் 

கருத்து கேட்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது 

என்பது குறித்த பேச்சுவார்த்தை மார்ச் 25ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழக 

காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் 

அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் 

ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கங்களுக்கு 

அவசர உத்தரவு! நேற்று நடைபெற்ற அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற 

காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த 

அழகிரி, “பேச்சுவார்த்தை வெற்றிகரமாக மனப்பூர்வமாக மகிழ்ச்சிகரமாக நடந்தது. எங்களுக்குத் 

தேவையான தொகுதிகள் என்ன என்பதை அன்று உம்மன் சாண்டி தெரிவித்துவிட்டார். இடையிலே எங்கள் 

தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் வந்ததால் நாங்கள் அங்கே சென்று விட்டோம். இன்றும் 

பேசியிருக்கிறோம். விரைவில் முடிவு எட்டப்படும். இனி மேலிடப் பொறுப்பாளர்கள் வர மாட்டார்கள். நாங்களே 

பேச்சுவார்த்தை நடத்துவோம். காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் பெற்று அதில் 

ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எங்களது ஸ்ட்ரைக் ரேட் என்ன என்பதை நாடாளுமன்றத் 

தேர்தல் முடிவுகளை வைத்து தான் பார்க்க வேண்டும். விரைவில் முடிவு என்ன என்பதை உங்களிடம் 

தெரிவிப்போம்" என்று சிரித்தபடியே கூறிவிட்டு சென்றார். 22 தொகுதிகளில் ஓவைசி கட்சி: திமுக 

வெற்றியை பாதிக்குமா? இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி 

நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இது 

குறித்து நேற்றைய கூட்டத்திலேயே அழகிரி திமுகவிடம் தெரியப்படுத்தி உள்ளதாக கூறுகிறார்கள். "கடந்த 

முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட வேண்டாம் என்று எங்கள் தலைவர் ராகுல் 

காந்தி கூறிவிட்டார். 41 தொகுதிகளுக்குக் குறைந்தால் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்றும் 

தெரிவித்து விட்டார்" என்று திமுகவிடம் கே.எஸ்.அழகிரி தெரிவித்துவிட்டுதான் வெளியே வந்ததாக இரு 

தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை திமுகவின் கூட்டணி தொடர்பான அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக 

கூறுகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி 

பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என நினைக்கிறார். 

ஆனால் திமுக குறைவான இடங்கள் ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. வைத்திலிங்கம் எடுத்த சர்வே: ஷாக் கொடுத்த 

தினகரன் மேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் திமுகவுக்கு சேவகம் செய்யும் 

வகையில் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்பதாக நினைக்கிறார் ராகுல். இதனால் அவர்களிடமும் 

தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.


Post a Comment

أحدث أقدم